பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label புதுமைத்தேனீ மா.அன்பழகன். Show all posts
Showing posts with label புதுமைத்தேனீ மா.அன்பழகன். Show all posts

69.திறவுகோல்



பூட்டே மகிழ்ச்சியெனில், பூப்பறிவே சாவியாம்;
தீட்டிய புத்தியோன் தேர்ந்தவன் - மாட்டி
இயல்பாய்த் திறந்தா லினிமைதரும்; மாறாய்
இயற்றி னிடும்பை தரும்.

62.அன்பை வெளிக்காட்டு !



வாலாட்டி நாய்காட்டும்,வாய்ச்சொல்லில் கிள்ளைகாட்டும்
காலாட்டிக் காட்டும் குதிரையும் - தோலா
அளவேனும் காட்டார் அடுத்தவர்பால், உள்ளே
அளவிலாது அன்பிருந்தும் என் ?

59.புரிதல்...



புரிந்த முதல்கவிதை பெற்றாள்; முயன்று
தெரிந்தவிடம் தந்தையே; தோற்றவிடம் இல்லாள்
புரியாமல் போன கவிதை புதல்வர்;
புரிந்தும் புரியாத நான்.

55.உண்மையெது




உண்டென்பான்;ஓர்நூறு சான்றென்பான்; ஆண்டவனைக்
கண்டுகொள்ளக் கண்கோடி வேண்டுமென்பான் - உண்மையாக்க‌
ஆத்திக னாயிரங்கள் சொன்னாலும்; ஒன்றுரைப்பான்
நாத்திக னில்லை யென.

53.அறிவிருள்




ஆளில்லாக் கூட்டத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதுவும்
தாழில்லாக் கூடத்துள் தானியத்தைச் சேர்ப்பதுவும்
வாளில்லார் கோட்டைகாக்க வாசலிலே நிற்பதுவும்
கோளில்லா வானமென்றே கொள்.

50.தானே சொல்லற்க‌ !



நல்லமரம்! தீர்மானம்! நாமதைக் கேட்டல்ல‌
நல்கும் பழங்களாலே நற்பெயராம் - வல்ல‌
செயற்கரிய செய்தமெனச் செப்பாதே ! செப்பும்,
வியந்ததைக் கண்ட விடத்து.

24.போனால் வாராது



பார்த்த கதிரவன் மீண்டெழுவான் வானில்
எரிந்திட்ட வால்மீன் எழாது - சரிந்திட்ட‌
செல்வம் செயலால் திரும்பும்; திரும்பாதே
நல்வாய்ப்பும் நாளும் கடந்து.

பாசமுடன்

ஈழம்

Photobucket