மரபில் பூத்த மலர்கள் (கவிஞர் பலரின் பாக்களின் தொகுப்பு)
காத்தருள்வாய் கந்தா கருவிழியைக் கண்ணிமைக்காத்தல்போல் காப்பாய்; கடம்பா கதறுகின்றேன்காட்டுன் கனிவருளை கதிர்வேலா காகிதக்கப்பல் கடலைக் கடக்க.
என்னை உனதாக்கி்க் கொல்லுமது;என்விழியில்உன்னை விருந்தாக்கிக் கொள்ளுமது;என்னெதிர்நீமண்ணில் வரைகோடுங் காட்டுமது உன்னிருகண்ணில் வழியு மது.
மெத்த படித்தும் பயனில்லை முன்னவர்எத்தனையோ பட்டும் புரியவில்லை நித்தமிங்குபோரை விரும்பி புரிந்திடுவார் பூமியில்யாரைத்தான் நோவதோ போ.