பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label மதுரை பாபாராஜ். Show all posts
Showing posts with label மதுரை பாபாராஜ். Show all posts

124.அடக்குமுறை !




அடக்குமுறை எங்கள் அணுகுமுறை என்றே
அடங்காமல் ஆடும் அரசாங்கந் தன்னை
அடக்குவார் நாட்டுமக்கள் தேர்தலின் மூலம்!
அடங்காமை வீழ்ச்சிக்கே வித்து.

31.திகில்




திகிலின் பிடிகள் நெருக்கி அணைக்க
திகிலின் மடியில் துவண்டு விழுந்தேன்!
திகிலின் தெருவில் தினமும் பயணம்!
அகத்திலே நிம்மதி ஏது?

12.அறிவுடைமை!




எப்படி உன்வாழ்க்கை இங்கே அமைகிறதோ
அப்படி வாழ்தல் அறிவுடைமை -- எப்படியும்
என்றும் வளைத்திடலாம் என்றுமட்டும் எண்ணாதே!
பண்பால் வளைவதே வாழ்வு.

11.உண்மையாய் இரு!




காலில் விழவேண்டாம்! காவடித் தூக்கவேண்டாம்!
நாளும் துதிபாடும் நாவேண்டாம் -- வேளை
வரும்பொழுது கால்களை வாரிவிடும் எண்ணம்
ஒருநாளும் வேண்டாம் உணர் .

பாசமுடன்

ஈழம்

Photobucket