பாடல்கள்

வாவா மணிவண்ணா

ஓம் நமோ நாராயணா

கூப்பிடுவோம்

Showing posts with label கி.கோவிந்தராசு. Show all posts
Showing posts with label கி.கோவிந்தராசு. Show all posts

57.பெண்ணின் பெருமை !




உண்ணவைத்துப் பின்னர் உறங்கவைத்துப் பிள்ளையென்
கண்ணுறக்கம் கண்டு களிப்புற்றாள் - என்நாவே
இன்னமும் தாமதம் ஏனோசொல் இப்பொழுதே
பெண்ணின் பெருமையைப் பாடு

56.கடற்கரை !



கவிதை எழுதிட கற்பனை ஊற‌
செவியில் அலையோசை சிந்த - புவியில்
உடல்நலம் பெற்றுநல் உற்சாகம் கூடக்
கடற்கரைக் காட்சியினைக் காண்!

52." அம்மா " எனவே அழை !




தூயநல் தொன் தமிழைத் தாய்மொழியாய்ப் பெற்றுயர‌
காயமுயிர் ஈந்தான் கடவுளுமே _ தாயவளை
" மம்மி " எனச்சொல்லி மாய்ந்திடாது செந்தமிழால்
" அம்மா " எனவே அழை !

44.இடம்விட்டு இடம் !




தலைவாரிப் பூச்சூடி தங்கநகை பூட்டிச்
சிலைபோல் அலங்காரம் செய்து - பிழைக்கத்
தகுந்த துணைதேர்ந்து தாய்வீட்டை விட்டுப்
புகுமனை போவாளே பெண் !

41.அழகின் சிரிப்பு !




கற்சிலை ம‌ண்நதி காடு மலைஅருவி
பற்பலவும் பார்த்தோமே பேரழகாய் - நற்செயல்
நாளும் புரிவார்கள் நம்மோடு வாழ்ந்திடின்
வாழும் வனப்பின் சிறப்பு.

பாசமுடன்

ஈழம்

Photobucket